Skip to main content

Posts

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
Recent posts
வணக்கம்  எழுத்தாளர் சுஜாதா முகநூல் பக்கம் / புதிய புத்தக அறிமுகம்..... கிட்டத்தட்ட இரண்டரை கால இடைவெளிக்குப் பிறகு உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி.... மறைந்த எழுத்தாளர் சுஜாதா மீதுள்ள அளவிடமுடியாத ஈடுபாட்டால், விளையாட்டாக ஆரம்பித்த சுஜாதா பற்றிய முகநூல் பக்கம் இன்று 11,000 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள குழுவாக ஆலமர வளர்ச்சி கொண்டுள்ளது. நிறைய சுஜாதா வாசகர்கள் தவிர புகழ்பெற்ற எழுத்தாளர்களான இரா.முருகன், சுஜாதா தேசிகன், ( சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி) எழுதிய ரஞ்சன், பழம்பெரும் நடிகர் பாரதி மணி, ஜெயராமன் ரகுநாதன் உள்ளிட்ட பல முக்கிய சுஜாதா ஆர்வலர்களும் இந்தக் குழுவில் இணைத்துள்ளனர். குழு ஆரம்பித்த கடந்த சில மாதங்கள் முன் வரை, சுஜாதா எழுதிய / அல்லது / அவர் பற்றிய பதிவுகளை மட்டுமே இந்த முகநூல் பக்கத்தில் அனுமதித்து வந்தோம். இப்போது, புதியவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வண்ணம் குழு அங்கத்தினர்களின் கதைகள் / கட்டுரைகள் / கவிதைகள் ஆகியவையும் இடம் பெறுகின்றன. குழுவில் இணைய சுட்டி:  அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு இதே ஊக்கத்தில், முதன்முதலாக நானும் ஒரு (Amazon Kindle வட
சிலை சிலையாம் காரணமாம் - 1:  கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை... 2011 அக்டோபர் 30... பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt) பன் னாட்டு விமான நிலையம். இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக, முதலா வது ஓடுதளத்தில் தன்னை ஆயத் தப்படுத்திக் கொண்டிருக்கிறது யுனை டெட் ஏர்லைன்ஸ் விமானம். அதில் பயணிக்கக் காத்திருக்கும் பயணி களுக்கு இமிக்ரேஷன் சடங்குகளை முடிப்பதற்காக அவசரகதியில் இயங் கிக் கொண்டிருக்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். ஆண்டுக்கணக்கில் கூண்டுக்குள் சிக்க வைக்கப் போகும் ஆபத்து தன்னை நெருங்கிக் கொண்டிருப்பது தெரியா மல், 60 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவர் கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென பரபரப்பாகிறது விமான நிலையம். வந்திருப்பது சர்வதேச போலீஸான ‘இன்டர்போல்’ என்றதும் வணக்கம் வைத்து வழிவிடுகிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். அடுத்த சில நிமிடங் களில் ‘இன்டர்போல்’ (Interpol) வாகனத்தில் இறுக்கமான முகத்துடன் பயணித் துக் கொண்டிருந்தார் சுபாஷ் சந்திர கபூர் என்ற அந்தப் பெரியவர். சுபாஷ் சந்திர கபூர
எங்க ஊரு வாசம்: கள்ள வலியைப் போக்கும் விளக்கெண்ணெய்!! -பாரத தேவி  அந்தக் காலத்துச் சிறுவர், சிறுமிகளுக்கு நாலு வயசு, மூணு வயசு ஆகும்வரை உடம்பில் துணி என்பது இருக்காது. பள்ளிக்கூடம், படிப்பு என்பதும் கிடையாது. அவர்கள் பாட்டுக்கு தெருவிலும் மந்தையிலும் புழுதியேறிய உடம்போடு எப்போதும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். பொங்கல், தீபாவளி வந்தால் மட்டுமே அவர்களின் தாய், தங்கள் கிழிந்த சேலைகளை இன்னும் அதிகமாய்க் கிழித்துப் பெண் பிள்ளைகளுக்கு இடுப்பில் கட்டி அம்மணத்தை மறைப்பார்கள். ஆண் பிள்ளைகளுக்கு அதே கிழிந்த சேலை கோவணமாகப் பயன்படும். வீட்டுப் பெரியவர்கள் தாங்களே திரித்த புளிச்ச நாற்றின் கயிற்றினால் கூரையை வேய்வார்கள். இவ்வளவு நாளும் வேலை செய்து லாடம் தேய்ந்த காளைகளை கயிறு கட்டிச் சாய்த்து அதன் காலில் புது லாடம் அடிப்பார்கள். அப்போதுதானே மாட்டு வண்டிப் பந்தயத்தில் ஓட முடியும்! அதோடு தொலைதூர ஊர்களில் வயதாகி நடக்க முடியாமலும், கண் பார்வை மங்கிப் பார்க்க முடியாமலும் இருக்கும் தங்களின் ‘அம்மி, சீயான்' அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக வண்டிகட்டிக்கொண்டு போனார்கள். பாவம் அவ
தனி ஒருவரின் கடைசி ஆசையால் கர்நாடகாவில்  ஒரு கிராமமே கண் தானம் செய்தது கர்நாடகாவில் சாலை விபத்தில் உடல் இரு துண்டாகி இறக்கும் தருவாயிலும் உறுப்பு தானத்தை வலியுறுத்திய ஹரீஷின் வேண்டுகோள்படி, அவரது கிராமமே கண் தானம் செய்துள்ளது. ‘இறந்தும் உலகை பார்க்கலாம்’ என தனி ஒருவன் ஏற்படுத்திய விழிப்புணர்வு, அங்கு பல நெகிழ்ச்சி சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. துமகூரு மாவட்டம் கெரேகவுடனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (26), பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 16-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, லாரி மோதியதில் ஹரீஷின் உடல் இரு துண்டுகளானது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர் கூறும்போது, “நான் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். எனது உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள்” என காப்பாற்ற வந்தவர்களை கைகளை கூப்பி கேட்டுக்கொண்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 20 நிமிடங்களில் ஹரீஷ் உயிரிழந்தார். இதையடுத்து கடைசி ஆசையின்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் சேதமடைந்தத
எங்க ஊரு வாசம்: பாரத தேவி  விருந்தாளிக்கு வெண்கலப் பானை தண்ணி வெண்கலத்தில் சாமான்களைப் புழங்கியதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பின் கிழக்குப் பார்த்த மூலையில் இரண்டு குடம் தண்ணீர் பிடிக்கும் வகையில் பெரிய, பெரிய பானைகள் ரொம்ப பவுசாக உட்கார்ந்திருக்கும். இந்தப் பானைகள் அங்கே இருக்கும் எல்லாப் பொருட்களிலும் பிரதானமானது. ஒருமுறை, அல்லது இரண்டு நெல்லுச் சோறு பொங்கும்போது அந்தத் தண்ணியை இந்தப் பானையில் ஊற்றி ஒரு கை உப்பைப் போட்டுவிடுவார்கள். இரண்டு நாள் கழித்து அந்தத் தண்ணி புளித்துப் போகும். பிறகு அதில் இரண்டு குடம் பச்சைத் தண்ணியை ஊற்றி விடுவார்கள். அது கிராமத்து எளிய சனங்களுக்கு. அமுத சுரபியாக மாறிவிடும். ஏனென்றால் இப்போதையது போல் அப்போது ஒரு கிலோ அரிசியை ஆக்கி, சூடாகச் சாப்பிட முடியாது. அப்போது பெரும்பாலும் கூட்டுக் குடும்பம்தான். அதோடு பிள்ளைகள் பிறப்பதைத் தடுக்க எந்தத் தடையும் இல்லாததால் ஒவ்வொருவரும் பத்துப் பிள்ளைகள் வரை அண்டியும் சவலையுமாகப் பெற்று எடுத்தார்கள். அதனால் ஒரு வீட்டுக்கு வரகரிசி, குருதவல்லி அரிசி ஏதாக இருந்தாலும் இர
எங்க ஊரு வாசம்: பாரத தேவி  புது நெல்லு புதுச் சோறு! பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற பழமொழி இந்த மாதத்துக்கு ரொம்பவும் பொருத்தமாக இருந்தது. போன வருசத்திலிருந்து இதுவரை ஆக்கிக்கொண்டிருந்த பழைய பானைகளையெல்லாம் கழித்துவிடுவார்கள். அப்படிக் கழிக்கும்போது கோழிகளின் அடை ஓட்டுக்காக, பயறு வகைகளை வறுப்பதற்கு வரையோட்டுக்காக, குத்தும் உரலுக்கு வாப்பட்டிக்காக, பானையின் வாவளையத்தை பிரிமணைக்குப் பதிலாக... இப்படித் தேவைக்கு ஏற்றபடி பானைகளை உடைத்துத் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்வார்கள். அதோடு புதுப்பானையில் வெள்ளையடிப்பதற்கான சுண்ணாம்பைப் போட்டால் பானை அப்படியே விரிந்துவிடும் அதனால் அதற்கும் பழைய பானைதான் தேவைப்பட்டது. இப்படிப் பானைகளைக் கழித்த பின் வீட்டின் கதவுகள், ஏர் கலப்பை, மோக்கா, மோனி, பின்உருளை, முன்உருளை, குத்துக்கால் என்று அனைத்தையும் தூக்கிக் கொண்டுபோய் குளத்தில் போட்டு எல்லாவற்றையும் துப்புரவாகக் கழுவி கொண்டுவருவார்கள். பொங்கல் வருவதற்கு முன்னால் நெல்லைத் தவிர வெவ்வேறு தானியங்களை எடுத்து புதுச் சோறு ஆக்கிவிடவேண்டும். அப்போதுதான் பொங்கலன்று நெல்லுச் சோறு